ஒரு இருசக்கர வாகனத்தை 2018ல் காயம்பட்ட பறவைகளை மீட்கும் நோக்கத்துடன் மாற்றிய டெல்லி சகோதரர்களின் பணிகள் இன்று அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சகோதரர்கள் ஒவ்வொருநாளும் பல டஜன் அரிய பறவைகளின் உயிரைக் காப்பாற்றுகின்றனர்.
தாழ்வாகத் தொங்கும் கம்பிகள், மிகுந்த போக்குவரத்து நெரிசல், பட்டம் பறக்கவிடுவதில் மக்களுக்கு இருக்கும் பெரும் ஆர்வம் போன்றவை டெல்லி நகரை பறவையினங்கள் வாழ ஆபத்தான இடமாக மாற்றியுள்ளது. இதை உணர்ந்த இந்த சகோதரர்கள் எதிர்பாராதவிதமாக ஒரு நாள் தொடங்கிய செயலால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 50,000 விலங்குகள் காப்பாற்றப்பட்டுள்ளன.
அமித் (Amit) மற்றும் அபிஷேக் ஜெயின் (Abhishek Jain) என்ற இந்த இரண்டு சகோதரர்கள் தங்கள் சொந்த வருமானத் தில் இருந்து ஒரு இருசக்கரவாகனத்தை பற வைகளின் உயிர் காக்கும் ஆம்புலன்ஸாக மாற்றினர். இதில் முதலுதவி சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், மற்றவை அடங்கிய ஒரு பெட்டியும் பொருத்தப் பட்டுள்ளது. ஆதரவு பெருகியதுடன் 2022ல் வித்யாசாகர் ஜீவ் தயாபரிவார் (Vidyasagar Jeev Daya Parivar) என்ற அறக்கட்டளையை நிறுவினர்.
பறவைகளுக்காக ஒரு மருத்துவமனை
காயம்பட்ட பறவைகளுக்கு முதலுதவி சிகிச்சை தருவதற்காக இருவரும் ஒரு அறை முழுவதும் பறவைக்கூடுகள், மருந்துகள் போன்ற வசதிகளை செய்து வைத்துள்ளனர். டெல்லியில் அரசு பறவைகளுக்காக ஒரு மருத்துவமனையை தொடங்கவேண்டும் என்று கோருகின்றனர். பறவைகள் நமக்கு முன்பிருந்தே பூமியில் வாழும் மகத்தான உயிரினங்கள். பிசாவைக் கூட வாசல் படிக்கு வந்து கொடுக்கும் சொகுசான வாழ்வையே இன்று பலரும் முக்கியமாகக் கருதுகின்றனர். இந்த நிலை மாறவேண்டும் என்று இருவரும் வலியுறுத்துகின்றனர்.
தகவல் தொடர்புகள் மூலம் அவசர உதவி தேவைப்படும் பறவைகள் மீட்கப் படுகின்றன. ஆபத்தில் இருக்கும் ஒரு உயிரைக் காப்பாற்றுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி மகத்தானது. நஞ்சுவைத்தல், கம்பி களில் சிக்கிக்கொள்ளுதல், பட்டங்களின் நூலில் சிக்குதல் போன்ற பல்வேறு காரணங்களால் பறவைகள் இன்று அதிக ஆபத்தை எதிர்நோக்குகின்றன.
2018ல் ஒரு நாள் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் வழியில் இருவரும் மனதை நெகிழச்செயும் ஒரு காட்சியை பார்த்தனர். வழியோர மரக்கிளை ஒன்றில் ஒரு பறவை கம்பியில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. இதைப் பார்த்தபிறகு எதுவும் செய்யாமல் எங்களால் செல்லமுடியவில்லை என்கிறார் அமிட் ஜெயின்.
அரைமணி நேரம் அந்தப் பறவையை காப்பாற்ற முயற்சி செய்தும் பலன் ஏற்பட வில்லை. சகோதரர்கள் தீயணைப்புப் படையினரை அழைத்தனர். பறவை மீட்கப் பட்டது. அமித் மருந்துக்கடை வைத்திருக் கிறார். அபிஷேக் ஜெயின் துணிக்கடை நடத்துகிறார். இருவரும் இந்தப்பணிக்காக மேலும் தங்களால் முடிந்ததை செய்ய விரும்பினர்.
விரிவடைந்த இயக்கம்
இதன் பின் இருவரும் தங்கள் ஓய்வு நேரத்தை டெல்லியின் பறவைகளைக் காக்க செலவிட ஆரம்பித்தனர். 2022ல் தங்கள் திட்டத்திற்கு அரசிடம் அதிகாரப் பூர்வ அங்கீகாரம் பெற்று பதிவு செய்தனர். இன்று அறக்கட்டளை 600 தீவிர செயல்பாட்டாளர்கள், 1000 ஆதரவாளர்களுடன் இயங்குகிறது. இவர்கள் உதவியுடன் நாள்தோறும் 30 முதல் 35 பறவைகள் மீட்கப்படுகின்றன.
தொடக்கத்தில் தாங்கள் இருவர் மட்டுமே இந்த வேலையில் ஈடுபட்டோம். செய்தி பரவ ஆரம்பித்தவுடன் வாழ்வின் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் மக்கள் எங்களுடன் இணைந்துகொண்டனர் என்று அமித் கூறுகிறார். பூமியில் வாழ பறவைகளுக்கு எல்லாவிதமான உரிமைகளும் உள்ளன. ஆனால் மனிதன் வளர்ச்சி என்ற பெயரில் அவற்றின் வாழிடத்தை அழிக்கிறான்.
மயில் முதல் புறா வரை
பறவை மீட்புப்பணிகள் அர்ப்பணிப்பு டன் செயல்படும் தன்னார்வலர்களால் சிறந்தமுறையில் நடைபெறுகிறது. மூன்று பயிற்சி பெற்ற தன்னார்வத் தொண்டர்கள் அழைப்பு மையத்தைக் கவனித்துக்கொள்கின்றனர். மீட்கப் பட்டுள்ள பறவையினங்களில் மயில்கள், கழுகுகள், கருடன், ஆந்தைகள் மற்றும் புறாக்கள் அடங்கும். சாலையோரங்களில் புறாக்களுக்கு தானியங்களை உணவாகக் கொடுக்கும் இடங்கள் வந்ததால் இப்போது நகரில் புறாக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த சகோதரர்கள் எல்லா உயிரினங்களிடமும் அன்பு காட்டவேண்டும் என்று வலியுறுத்தும் ஜைன மதத்தைச் சேர்ந்தவர்கள். சிறிய வயது முதல் சிறியது பெரியது என்று வேறுபாடு இல்லாமல் எல்லா உயிரினங்களையும் மதித்து வாழவேண்டும் என்று சொல்லி வளர்க்கப்பட்டனர்.
பறவைகளுக்காக குரல் கொடுப்பவர்கள்
மீட்புப்பணியில் இருந்து இருவரும் இப்போது பறவைகளைக் காக்கும் பிரச்சாரகர்களாக மாறியுள்ளனர். காயம் பட்ட பறவைகளை கால்நடை க்ளினிக்கு களுக்கு எடுத்துச்சென்றால் அங்கு அவற்றின் சிகிச்சைக்காக போதுமான இடவசதி இல்லை. மருந்துகள் வாஞ்க நிதி வசதி இல்லை. மனிதர்களுக்கு இருப்பது போல விலங்குகளுக்கும் பறவை களுக்கும் எல்லா வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் தொடங்கப்பட வேண்டும் என்று அமித் வலியுறுத்துகிறார்.
பறவைகள் நலமுடன் வாழ மரங்கள் அவசியம். இது பற்றிய விழிப்புணர்வை இருவரும் இப்போது மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப்பணியை தொடங்கிய போது சுற்றி இருந்தவர்கள் எங்களைப் பார்த்து நகைத்தனர். அவர்களுக்கு இது அந்நியமாகத் தோன்றியது. ஆனால் புரிந்துகொண்டபின் இதற்கு பலரும் ஆதரவு தருவார்கள் என்று நம்பினோம். இப்போது இது நிஜமாகியுள்ளது என்று அபிஷேக் கூறுகிறார்.
பறவைகளைக் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டுள்ள இந்த சகோதரர்கள் மனிதகுலத்திற்கே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.